கண்ணாடி பெட்டிக்குள் யோகா செய்த சிறுமி!
கோயம்புத்தூரில் எட்டு சிறுவர், சிறுமிகள் இணைந்து எட்டு யோகாசனங்களை பல்வேறு விதமாகச் செய்ததோடு, கண்ணாடி பெட்டிக்குள்ளும் யோகா செய்தி அசத்தினர்.
கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் எட்டு வயது முதல் பன்னிரண்டு வயது வரையிலான ஆறு சிறுமிகள், இரண்டு சிறுவர்கள் என எட்டு பேர் இணைந்து யோகாவில் சாதனை படைத்துள்ளனர்.
வெவ்வேறு சாதனைகளாக நடைபெற்ற இதில் முன்னதாக சம்யுத்தா என்ற சிறுமி ஒன்றரை அடி பரப்பளவு மற்றும் உயரம் கொண்ட தொட்டியில் லாவகமாக அமர்ந்தபடி கண்டபிடராசனா எனும் ஆசனத்தைத் தொடர்ந்து 12 நிமிடம் 36 விநாடிகள் செய்து அசத்தினார்.
தொடர்ந்து சிறுமிகள் சம்ரிதா, மேகா, அக்ஷரா, வர்ஷா, வேதா ஆகிய ஐந்து சிறுமிகளும் எட்டு அடி உயர டவரின் மீது ஏறி பூமாசனாம், உஷ்டாரசனம், கோமுகாசனம், கபோடாசனம், மற்றும் வாமாதேவாசன என பல்வேறு ஆசனங்களைச் செய்து அசத்தினர்.
இதே போலச் சிறுவர்கள் தஸ்வந்த், மற்றும் அஸ்வந்த் ஆகியோர் டவரின் மீது ஏறி யோகாவைச் செய்தனர
எட்டு சிறுவர் சிறுமிகள் இணைந்து செய்த இந்நிகழ்வு டி.சி.பி.உலக சாதனை பதிவாகப் பதிவு செய்யப்பட்டது.