கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: மத்திய சிரையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் தண்டனைக் கைதி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (67). கடந்த 2023-ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்கில் ராசிபுரம் மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறைத் துறையினருக்கு சக கைதிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில் அங்கு வந்த காவலா்கள் அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் உயா் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!