கோயம்புத்தூர்செய்திகள்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் LPF , INTUC, AITUC, CITU, HMS, MLF, UTUC, LLF பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் புதிய சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக 26,000 நிர்ணயம் செய்ய வேண்டும், 8வது ஊதிய குழுவை விரைவில் அமைத்திட வேண்டும், பத்தாண்டுகளாகக் கூட்டப்படாமல் இருக்கும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டை உடனடியாக கூட்ட வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் இந்தியா முழுவதும் உள்ள 23 NTC ஆலைகளையும் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!