10 -ம் வகுப்புத் தேர்வில் சிறைவாசிகள் 100% தேர்ச்சி!
கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர், அதற்காக விண்ணப்பித்துத் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறை கைதிகளில் 23 பேர் தேர்ச்சியடைத்திருந்தனர். இன்று ( வெள்ளிக்கிழமை ) வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், தேர்வு எழுதிய 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்குத் தயாராகும் சிறை வாசிகளுக்கு போதுமான வசதிகளைச் சிறை நிர்வாகம் செய்து கொடுத்து வரும் நிலையில் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுச் சாதித்துள்ளனர்.