HealthTop Storiesகோயம்புத்தூர்

3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தி அரசு மருத்துவர்கள் அசத்தல்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 வயது சிறுவனுக்கு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கால்கள் பொருத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சொக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு ரிஷ்வந்த் (3) , ஜஸ்வந்த் (3) என்ற இரட்டையர் மகன்கள் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கும் பிறவியிலேயே இரு கால்களிலும் தசை பிளவு பாதிப்பு இருந்துள்ளது. இதனால் இருவரும் நடக்க முடியாமல் சூழலிலிருந்தனர்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் செயற்கை கால்கள் பொருத்தக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். முதல் கட்டமாகச் சிதைவு ஏற்பட்டுள்ள வலது கால் முட்டிக்குக் கீழ் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

தொடர்ந்து சிறுவர்கள் உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். பின்னர் சிறுவர்களுக்குச் செயற்கை கால் பொருத்த அளவீடு செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் உடல் உறுப்புகள் தயாரிக்கும் நிறுவனம் மூலம் செயற்கை கால்கள் தயாரிக்கப்பட்டது.

பின்னர் அவை சிறுவர்களுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. பின்னர் அதனைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறுவர்கள் தானாக நடப்பது, தனது பணிகளைச் செய்து வருகிறார். ரிஷ்வந்த்திற்கு வழங்கப்பட்டுள்ள செயற்கைக் காலில் எடை 500 கிராமிற்கும் குறைவானது.

இத்தகைய எடை குறைந்த செயற்கை கால்கள் அதிநவீன தரத்துடன் அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்குப் பொருத்தப்படுவது இதுவே தமிழ்நாட்டின் முதல் முறையாகும்.

குழந்தைகள் இலகுவாக நடப்பதற்கு வசதியாக எடை குறைந்த அதிநவீன கார்பன் பைபர் பாதம் மற்றும் கால் முட்டி மூலமாக முதல்முறையாக நவீன முறையில் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது:
சில வருடங்களுக்கு முன்பு வரை கை கால்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்ட நோயாளிகள் செயற்கை அவயங்களுக்காகச் சென்னை சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வந்தது.

2020 ஆண்டிலிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயற்கை உடல் உறுப்புகள் தயாரிக்கும் நிலையத்திலிருந்து இந்த வசதிகளை நோயாளிகள் பெற்றுக் கொள்ளும் சிகிச்சை முறைகள் நவீன மருத்துவ வளர்ச்சிகளால் சாத்தியமாக்கப் பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, கோவை மருத்துவக் கல்லூரியிலிருந்து, முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடு மூலம் 200 ம் மேற்பட்ட செயற்கை கை மற்றும் கால்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!