கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: பிரம்மாண்ட அசோகர் தூண் திறப்பு!

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரில் ரவுண்டான உள்ள பகுதிகளில் தமிழகத்தின் சிறப்பை போற்றும் வகையிலும், வரலாற்றுச் சின்னங்களும், விழிப்புணர்வு சின்னங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாகக் கோவை உக்கடம் ரவுண்டானாவில் தனியார் நிறுவனம் பங்களிப்பில் அசோகர் தூண் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 டன் எடையும் 16 அடி உயரத்துடனான அசோகர் சின்னம் இந்தியாவிலேயே ஸ்தூபி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதன் திறப்பு விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு அசோகர் தூண் சின்னத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் பரதநாட்டியம், கதகளி ஆகியவை நடந்தது. நிகழ்ச்சிகள் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!