Top Storiesதமிழ்நாடு

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று விசாரணை முடிவடைந்து கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். +

அதன்படி, பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,

“பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!

அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக அதிமுகவும் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு வரவேற்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!