கோயம்புத்தூர்செய்திகள்

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்!

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டியும், கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஒவ்வொரு ஆண்டும் மே.12 ஆம் தேதி உலக செவிலியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கேக் வெட்டியும், ஆடல், பாடல் என உற்சாகமாகக் கொண்டாடினர்.

மேலும் செவிலியர்களுக்கான ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள், மிக ஓவியம் ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து செவிலியர்கள் மெழுகு வர்த்தியைக் கையில் ஏந்தி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!