கோயம்புத்தூர்செய்திகள்

காட்டு யானையை விரட்ட வந்த சின்ன தம்பி..!

கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, சின்ன தம்பி என்ற இரண்டாவது கும்கி யானை வரவழைப்பட்டுள்ளது.

சின்னதம்பி கும்கி யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தாடகம் பகுதியில் பிடிபட்ட காட்டு யானை
கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்குக் கடந்த பிப்.1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பூண்டி வனப்பகுதியிலிருந்து கடந்த சில வாரங்களாக வெளியே வரும் காட்டு யானை, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் பகல் நேரங்களிலும் வந்து கடைகளைச் சேதப்படுத்துகிறது.

இதனால் பக்தர்கள் பாதுகாப்புக்காகவும், காட்டு யானையை விரட்டவும் நரசிம்மன் என்ற கும்கி யானை கடந்த வாரம் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதலாக மற்றொரு கும்கி யானையும் வெள்ளிங்கிரி கோயிலுக்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டது. அதன் படி சின்ன தம்பி என்ற கும்கி யானை வெள்ளிங்கிரி கோயிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த சின்ன தம்பி யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தடாகம், ஆனைக்கட்டி பகுதியில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வந்ததாக வனத்துறையால் பிடிக்கப்பட்ட காட்டு யானை.

மேலும் அதனை அடர் வனப்பகுதியில் விட்டு 100 கிலோ மீட்டர் மக்களைத் தொல்லை செய்யாமல் மீண்டும் கோயம்புத்தூர்-க்கு வந்த யானை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே.31 வரை அதிகளவு பக்தர்கள் வர உள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!