ஆபரேஷன் சிந்தூர் நடிவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு அளித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்ததாவது,

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும், ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்று உறுதியுடன் நிற்கும் என ஆதரவு தெரிவித்துள்ளார்.