கோயம்புத்தூர் ரயில் நிலையில் பாதுகாப்பு பணி தீவிரம்!
பஹல்காம் தாக்குதலுக்கு, எதிர்த்தாக்குதல் நடத்திய இந்திய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகள் உடைமைகள் முழுமையான சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், நாடு முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவிகள் மூலம் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
அதே போல சாதாரண உடையிலும் ரயில் நிலைய நடைமேடைகளில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.