கோயம்புத்தூர்தமிழ்நாடு

போத்தனூா் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

போத்தனூா் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் மாதத்தில் இயக்கப்பட்டு வரும் போத்தனூா் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 9 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் தாம்பரம் – போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், மே 11 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், போத்தனூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும் போத்தனூா் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06186) மறுநாள் நண்பகல் 12.15 மணிக்குத் தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!