TNPSC குரூப் 4 தேர்வுக்கு மே 6 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி தொடக்கம்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தோ்வுக்கு கோயம்புத்தூரில் வரும் மே 6 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையம் 2025 ஆம் ஆண்டிற்கான TNPSC Group IV தேர்வுக்கான 3935 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை25 ஏப்ரல் 2025 அன்றுவெளியிடபட்டுள்ளது. பத்தாம்வகுப்பு மற்றும் அதற்கு மேல்கல்வி தகுதி வாய்ந்த மனுதாரர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 24.05.2025 இத்தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் 06.05.2025 அன்று துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகவசதி, பயிற்சிகால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழுமாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட்டு வருகிறது.
https://tamilnaducareerservices.tn.gov.in στό @ பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி), தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டினை எடுத்து கொண்டு 06.05.2025 அன்று அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு 0422-2642388 & 9499055937 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகலாம்.
அல்லது https://t.me/cbedecgcoஎன்றtelegram இல் இணைவதன் மூலமாகவும் இவ்இலவச பயிற்சி வகுப்பு குறித்து தகவல்கள் பெற்று பயனடையுமாறும் கோயம்புத்தூர், மாவட்டஆட்சித் தலைவர் திபவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
.