கடற்படை அதிகாரிகளுக்கு டிப்ளமோ படிப்பு: புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கம்யூனிட்டி கல்லூரி கன்சல்டன்சி மையம், ஐஎன்எஸ் அக்ரானி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது.
ஐஎன்எஸ் அக்ரானியில் தகுதியுள்ள கடற்படை அதிகாரிகளுக்கு டிப்ளமோ பட்டயப் படிப்பு வழங்குவது தொடர்பான இந்த ஒப்பந்தத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.ஸ்ரீனிவாசன், ஐஎன்எஸ் அக்ரானியின் கமாண்டா் மன்மோகன் சிங் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் குழு உறுப்பினர் அஜீத்குமார் லால் மோகன், ஐஎன்எஸ் அக்ரானியின் மூத்த கல்வி அதிகாரி கமாண்டா் அமித்குமாா் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.