கோயம்புத்தூர்செய்திகள்

இயற்கை உபாதை கழிக்கச் சென்றவரை காட்டு யானை தாக்கியதில் படுகாயம்!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றவரை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

சிறுமுகை வனச்சரகம், ஓடந்துறை பிரிவு, ஓடந்துறை சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட வேடர்காலனி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(34).

புதன்கிழமை (ஏப்ரல் 30) காலை 6.15 மணி அளவில் காலைக்கடன் கழிப்பதற்காகச் சென்ற போது, யானை தாக்கியது. உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவரைப் பார்வையிட்டனர். வலது முகத்தில் காயங்களும், இடது கையில் எலும்பு முறிவு, உடலில் சிராய்ப்பு காயங்களும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல்நிலையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!