தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தர செய்யப்படுவார்கள் என்ற 2021 ஆம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகமே நேரடியாகத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்,
பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62ன் படியும் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படியும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில்
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் மாநகராட்சி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் இன்று மாநகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் எங்கும் குப்பைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.