Lifestyleகோயம்புத்தூர்

அக்‌ஷய திருதியை: காலை 5 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்!

அக்‌ஷயதிருதியை முன்னிட்டு கோயம்புத்தூரில் காலை 5 மணியிலிருந்தே கடைகள் திறக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி வருகின்றனர்.

அக்‌ஷய திருதியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நகைக் கடைகள் காலை 5 மணிக்கே திறக்கப்பட்டது.

ஒவ்வொரு கடைகளையும் வாழை தோரணங்கள், வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுக் காட்சியளித்தது. காலை முதலே பொதுமக்கள் நகைக்கடைகளுக்கு வந்து தங்கம், வெள்ளிகளை வாங்கி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு கடைகளிலும் சிறப்பு ஆபர்கள் வழங்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், அக்‌ஷய திருதி என்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும், சம்பிரதாயத்தால் தங்க நாணயங்கள், வெள்ளி பொருட்களைப் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!