செய்திகள்விளையாட்டு

மாநில அளவிலான போட்டிகளில் தேர்வாகிய கராத்தே வீராங்கனைகளுக்குப் பாராட்டு..!

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட 27 பதக்கங்கள் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகள் நடைபெற்ற போட்டியில் 1,000க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இதில் கோயம்புத்தூரிலிருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள்,5 தங்கம்,5 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 27 பதக்கங்கள் வென்று

முதலிடம் பிடித்துப் பெற்ற மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் மாநில அளவில் தேர்வாகி உள்ள வீரர் வீராங்கனைகளுக்குத் தலைமை பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!