செய்திகள்பொழுதுபோக்கு

தெய்வமே… கையில் சூடம் ஏற்றி ரஜினிகாந்த் -க்கு ஆரத்தி எடுத்த ரசிகர்!

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் சினிமா சூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்தை பார்த்தவுடன் கையில் சூடத்தை ஏற்றி ஆரத்தி எடுத்த ரசிகர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டி அடுத்த அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் 20 நாட்களுக்கு மேலாக அங்குத் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ரஜினிகாந்தை பார்ப்பதற்குக் காலை, மாலை என இரு வேலைகளிலும் ரசிகர்கள் தங்கி இருக்கக்கூடிய ரிசார்டிற்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ரஜினியைப் பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்தார்.

தொடர்ந்து ரசிகர்களைப் பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தற்போது அந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!