சித்திரை திருவிழா விருந்து – அடுப்பு ஆயில் இல்லாமல் 54 வகை தமிழர் உணவு!
சித்திரை திருநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் அடுப்பு மற்றும் ஆயில் இல்லா உணவகத்தில் 54 வகை தமிழர் மரபு உணவுகளைத் தயாரித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள உலகின் முதல் அடுப்பு இல்லா ஆயில் இல்லா உணவகமான படையல் உணவகத்தில், சித்திரை திருநாளை முன்னிட்டு 54 வகையான தமிழர்களின் மரபு உணவு வகைகளை, அடுப்பு மற்றும் ஆயில் இல்லாமல் தயாரித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.
சித்திரை திருநாள் விருந்து என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இதில் மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி, தூய மல்லி அரிசி சாப்பாடு, 21 வகை மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள், மலர்கள், மூலிகைகள் பயன்படுத்தி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டது. மூலிகை ஜூஸ், பச்சடி, அவியல், பொரியல், துவையல், பருப்பு இல்லாத சாம்பார், பால் தயிர் பயன்படுத்தாத மோர்க்குழம்பு, வரமிளகாய் புலிகளைப் பயன்படுத்தாத புளிக்குழம்பு என 54 வகை உணவுகளைத் தயாரித்துத் தயாரித்துள்ளனர்.
அடுப்போ, ஆயிலோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த உணவுகளை மக்கள் ரசித்துச் சுவைத்து மகிழ்ந்தனர். வழக்கமாக அடுப்பு மற்றும் ஆயில் இல்லாத உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சித்திரை திருநாளை முன்னிட்டு சித்திரை விருந்து என்ற பெயரில் 54 வகை உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.