Top Storiesகோயம்புத்தூர்

பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய காவலர் கைது!

கோயம்புத்தூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம்
காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் என்பவர் விசாரித்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க 1000 ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி 1000 ரூபாய் லஞ்சப் பணத்தைக் காவலர் ரமேசிடம் கொடுக்கும் பொழுது, காவலர் ரமேஷ்யை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகக் கைது செய்தனர். ரசாயனம் தடவிய பணத்தை ரமேசிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் , செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!