கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நான் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 50 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிட, புதிய குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 7 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 9 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 9 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் மனுக்களும் மத்திய மண்டலத்தில் 19 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 6 மனுக்களும் ஆகமொத்தம் 59 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள். பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் கல்தானா குமரேசன், உதவி நகர்நல பூபதி, ஆணையர்கள் முத்துசாமி(கிழக்கு). கூதுரைமுருகன்(மேற்கு), .குமரன்(தெற்கு), செந்தில்குமரன்மத்தியம்), மாநகர கல்வி அலுவலர் தாம்சன், செயற்பொறியாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள். மண்டய சுகாதார அலுவர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!